சனி, 9 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-211.

 

தன்னேரிலாத தமிழ்-211.

அத்து இட்ட கூறை அரைச் சுற்றி வாழினும்

பத்து எட்டு உடைமை பலர் உள்ளும் பாடு எய்தும்

ஒத்த குடிப் பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்

செத்த பிணத்தின் கடை.” ---நாலடியார், 281.

காவி ஆடையை இடுப்பில் அணிந்து பத்தாயினும் எட்டாயினும் பொருள் உடையவராய் இருந்தால், அவர் மக்களிடையே பெருமை பெறுவர். உலகில் உயர்குடியில் பிறந்தவராய் இருந்தாலும் ஒரு பொருளும் இல்லாதார் செத்த பிணத்தைக் காட்டிலும் இழிவாகவே கருதப்படுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக