வெள்ளி, 29 ஏப்ரல், 2022

தன்னேரிலாத தமிழ் –441: குறள் கூறும் ”பொருள்” பெறுக

 

தன்னேரிலாத தமிழ் –441: குறள் கூறும்பொருள்பெறுக


496

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.


வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர் கடலில் ஓடாது ; கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது. இடனறிந்து இயங்குக.


 எந்த ஒன்றின் இருப்பும் இயக்கமும் அதனதன் இடத்திலேதான் பெருமைபெறும் ; இஃது இயற்கையின் நியதி. இடம் மாறினால் தடம் மாறும்.


வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்

பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாதுநெட்டிருப்புப்

பாரைக்கு நெக்கு விடாப் பாறை பசு மரத்தின்

வேருக்கு நெக்கு விடும்.”நல்வழி, 33.


யானையின் உடலை ஊடுருவிப் பாய்ந்த  கூர்மையான அம்பு, பஞ்சில் பாய்ந்து ஊடுருவாது ; இரும்பால் செய்த கடப்பாரைக்கு உடையாத  கடிய கருங்கல் பாறையைப் பசுமையான மரத்தின் வளர்கின்ற வேர் உடைக்கும். அதுபோல எக்காலத்திலும் கடுமையான சொற்கள் இனிமை உடைய சொற்களை வெற்றி கொள்ள இயலாது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக