சனி, 16 ஏப்ரல், 2022

தன்னேரிலாத தமிழ் –434: குறள் கூறும் ”பொருள்” பெறுக

 

தன்னேரிலாத தமிழ் –434: குறள் கூறும்பொருள்பெறுக


469

நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்

பண்பறிந்து ஆற்றாக் கடை.


பிறர்க்கு நன்மை பயக்கும் செயல்களையும் அவரவர் இயல்பு அறிந்து செய்யாமற் போனால், நன்மையும் தீமையாகும் தவறு  உண்டாகிவிடும்.


நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

 கல்மேல் எழுத்துப்போல் காணுமே  - அல்லாத

 ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்

 நீர்மேல் எழுத்திற்கு நேர். ---- வாக்குண்டாம், 2.


நற்குணம் உடைய ஒருவருக்குக் காலத்தால் நாம் செய்த உதவியானது, கல்லில் செதுக்கப்பட்ட எழுத்தைப்போல என்றைக்கும் அழியாமல் நிலைத்திருக்கும். நற்குணம் இல்லாதவர்களுக்குச் செய்த உதவியானது,  நீர்மேல் எழுதப்பட்ட எழுத்தைப்போல் நில்லாது அழிந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக