புதன், 20 ஏப்ரல், 2022

தன்னேரிலாத தமிழ் –437: குறள் கூறும் ”பொருள்” பெறுக

 

தன்னேரிலாத தமிழ் –437: குறள் கூறும்பொருள்பெறுக

478

ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடுஇல்லை

போகாறு அகலாக் கடை.


வருவாய் வரும் வழி சிறியதாயினும் செலவுஆகும் வழி அகலமாக இல்லாதிருந்தால், கேடு ஒன்றும் ஏற்படாது. கொள்வழி அகன்றும் செல்வழி சிறுத்தும் இருத்தல் நன்று.


ஆனமுதலில் அதிகம் செலவானால்

 மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை

 எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்

 நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.”  - நல்வழி, 25.


தன்னிடம் இருக்கும் பொருளுக்குமேல் செலவு அதிகமானால் மானம் கெட்டு, அறிவு அழிந்து, பயணம் சென்ற திசை எங்கும் அனைவருக்கும் திருடனாய், எல்லாப் பிறவிகளிலும் தீயவனாய், நல்லோரால் வெறுக்கப்படும் நிலையை அடைவான்.

 எனவே,  வரவறிந்து;  செல்வழி அறிந்து வாழ்வாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக