சனி, 29 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 15. ஆய்தம் –எழுத்தாய்வு – 5.

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 15.

ஆய்தம்எழுத்தாய்வு – 5.

பிராமி-ஆய்தம்

தமிழ் வட்டெழுத்து வடிவுடைய அசோகரின் கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டில் (Ashoka’s 6 th. Pillar edict, 3rd century BC.) புள்ளியுடைய எழுத்துக்களும் ஆய்தமும் இடம் பெற்றுள்ளன. ஆய்தம்ஃ0 இன்றைய ஆய்தக்குறி போலின்றி மேலும் கீழும் சுழிபெற்று வலது பக்கம் ஒரு புள்ளியுடையதாய் இருந்தது.

ஆய்தப்புள்ளி கி.மு. 300இல் இகரம் இன்றுள்ளதைப் போலவே ஃ முப்பாற்புள்ளியாகப் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அசோகர் காலத்தில் கி.மு. 265 – 232 இல் இம்முப்பாற் வடிவம் 0ஃ மேலும் கீழும் புள்ளியுடன் இடது பக்கம் புள்ளியுடன் மாற்றம் பெற்றுள்ளது என்பார் அறிஞர் இரா. மதிவாணன்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக