வியாழன், 27 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 13 ஆய்தம் –எழுத்தாய்வு - 3

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 13

ஆய்தம்எழுத்தாய்வு - 3


ஆய்தம் –

“சிந்துவெளி நாகரிக காலமாகிய இரண்டாம் தமிழ்க் கழகக் காலதில் இல்லாதிருந்த ஆய்த எழுத்து மூன்றாம் தமிழ்க் கழகக் காலத்தில் மக்களிடையே பேச்சு வழக்கில் இடம் பெற்றது. –இரா. மதிவாணன்.

” ஆய்தம், அடுப்பு முக்கூட்டுபோல் முப்பாற்புள்ளியா? ஆய்தம் ஒற்றைப் புள்ளி என்பார். இருசிறகெழுப்பும் உடலது போல  இதன் இயக்கம் ஒரு புள்ளியா..? மூன்று புள்ளியா..? தமிழ்க் கல்வெட்டில் இவ்வெழுத்து சற்றே திரும்பி இகரமாக இருக்கிறது. ‘குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி என்பதனால் அதன் உரு என்பதும் புள்ளி மிசைய என்னாமல் மிசைத்து என்ற ஒருமைப் பயனிலையால் அப்புள்ளி ஒன்றுதான் என்பதும் முன்னர் மிசைத்தே என்பதனால் நிற்குமிடம் இடை / நடுவு என்பதும் தெற்றென விளங்கும்.” அறிஞர் வ.சுப. மாணிக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக