வெள்ளி, 28 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 14. ஆய்தம் –எழுத்தாய்வு – 4.

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 14.

ஆய்தம்எழுத்தாய்வு – 4.

”அவற்றுள்

மெய் ஈறுஎல்லாம் புள்ளியொடு நிலையல்” -104.

”குற்றியலுகரமும் அற்றென மொழிப” -105.

” குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே.” – 38.

மெய் எழுத்துகள் புள்ளி எழுத்துக்கள் எனப்பட்டன. மெய் எழுத்துக்களுள் ஒன்றெனக் கூறப்படாத ஆய்தம் தனியான ஒரு புள்ளியாலேயே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்தியாவில் ஆரியப்பட்டருடைய காலத்திலே அளவையிற் குறையும் இடங்களிலே அவ்வாறு குறையும் இலக்கத்தின் அல்லது வடிவத்தின் மேலே புள்ளியிடும் வழக்கம் இருந்து வந்தது, இவ்வழக்கம் பிற்காலத்திலே கல்வெட்டெழுதுவோராற் பின்பற்றப்பட்டது. கற்களிலே எழுத்துக்களைப் பொறிக்குமிடத்து, தேவையற்ற ஒன்று அல்லது பல எழுத்துக்களை நீக்கி வாசகர்கள் வாசிப்பதற்காக அவ்வாறு நீக்கப்படவேண்டிய எழுத்துக்களுக்கு மேலே புள்ளியிடுதல் வழக்கமாகும். அறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக