செவ்வாய், 11 ஏப்ரல், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் - ஆதித்தேச்சரம் – ஆதித்த சோழன்.29.

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -

ஆதித்தேச்சரம்ஆதித்த சோழன்.29.

சின்ன பண்ணை, பெரிய பண்ணை, நடுப்பண்ணை, ஐயர் பண்ணை, செட்டியார் பண்ணை இப்படிப் பல பண்ணைகள். ஒவ்வொரு பண்ணைக்கும் ஐம்பது அறுபது வேலி விளைநிலங்களும் ஒவ்வொரு ஊரும்(கிராமம்) சொந்தமாக இருக்கும்.ஊரில் உள்ள மக்களுள் 90% மக்கள் வேளாண் தொழிலாளிகளே. ஏழை எளிய இம்மக்கள் பண்ணைகளுக்கு அடிமைகளே! எவ்வித உரிமையும் கிடையாது. எல்லாத்தேவைகளுக்கும் பண்ணைகளிடம் கையேந்தி நிற்க வேண்டும். தீண்டதகாத உழவர்குடி மக்களுக்குச் சாட்டை அடி, சாணிப்பால் தண்டனை வழங்கப்படும். ஏன் என்று கேட்பாரில்லை.இந்தத் தண்டனைகளை மணியம், விசாரிப்பு வேலை பார்க்கும் குடியானவர்கள் நிறைவேற்றுவார்கள். இவர்கள் பண்ணைவீட்டுத் தெருக்களில் செருப்போ, துண்டோ, சட்டையோ போட்டுக்கொண்டு நடக்கமுடியாது. ஐயாவைக் கண்டால் குடியானவர்கள் தள்ளி நிற்பார்கள்; ஒடுக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளிகள் வேலிக்குள் ஒடுங்கி மறைந்து கொள்வார்கள்

குடியானவர்கள் பண்ணை வீடு சார்ந்த பணியாளர்கள் ; பண்ணை நிலம் சார்ந்த உழைப்பாளர்கள் அடிமைகள் போலக் கட்டுண்டுகிடப்பார்கள்; பண்ணைக்கு அன்றாடக் கூலிகளாகப் பாடுபவர்கள்கொடுத்ததுதான் கூலி வாய்பேச வழியற்றவர்கள். பண்ணையாளர்களுக்கு வியர்வை வெளியே வராது. பண்ணை ஆட்கள் வியர்வை செந்நீராய் நிலத்தில் வீழும். அந்ந வியர்வையில்தான் பண்ணயார்கள் குளிப்பார்கள்.

……………………………..தொடரும்………………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக