வியாழன், 6 ஏப்ரல், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் - ஆதித்தேச்சரம் – ஆதித்த சோழன்.24.

                                                                         

களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -

ஆதித்தேச்சரம்ஆதித்த சோழன்.24.

 


                                                                        களப்பாள்

என்னும்

திருக்களந்தை ஆதித்தேச்சுர வைபவம்-7-1-1941.

திருக்களர் மு. சுவாமிநாத உபாத்தியாயன்

காப்பு

அத்தி முகனடி நித்த நினைப்பவர்

சித்தி திருவொடு முத்தி பெறுவரே.”

---------------------

 இராசாத்தித்தன் வழிபாடு

அநாதி மலமுத்தராய், நித்தியராய், வியாபகராய், எல்லாவறிவும் எல்லா முதன்மையும் எல்லாவநுக்கிரகமும் உடையராய் விளங்கும் எண்குணக்கடவுளாகிய நமது பரமேசுவரன் தமது அடியார்களுடைய பக்குவாபக்குவத்துக்குத் தக்கபடிசாலோக, சாமீப, சாரூப, சாயுச்சியபதங்களை யளித்தாள்வதற்கான திருவுருவுடனெழுந்தருளியிருக்கின்ற சிவதலங்கள் பலவற்றுள்ளுஞ் சிறந்தோங்கிய இத்தலம்இராசாதித்தன்என்னும் அரசன் உண்டுபண்ணி வழிபட்டது. ( கற்பக்கிரகம் பின்புறத்தில் இராசாதித்தேச்சுரம் என்றிருந்த சிலாசாதனம் மறைந்துபோயிற்று.)

கூற்றுவநாயனார் திருத்தொண்டு

இத்தலத்தை இராசதானியாகக்கொண்டு, புறங்கரம்பை நாட்டையாண்ட, குறுநில மன்னனாகியகூற்றுவனாயனார்சிவ திரு நாமமாகிய ஐந்தெழுத்தின் பலத்தினால்சோழ, சேர, பாண்டியர்களைப் போரில் வென்று, சபாநாயகப்பெருமான் தமது திருவடியை முடியாகச் சூட்டப்பெற்று, சபாநாயகப் பெருமானுடைய திருவுருவத்தைப் பிரபலமாக இத்திருக்கோயிலில் அமைத்து வைத்துத் திருப்பணிசெய்து, சிவபதமெய்தினர்,(கூற்றுவநாயனார் புராணம்,12ஆம் திருமுறையாகிய திருத்தொண்டர் பெரியபுராணத்துளிருக்கின்றது.)

ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக் கோனடியேன்(திருத்தொண்டத் தொகை)

ஓதந்தழுவிய ஞாலமெல்லா மொரு கோலின் வைத்தான்

கோதை நெடுவேற் களப்பாளனாகிய கூற்றுவனே”- ( திருத்தொண்டர் திருவந்தாதி)

குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்

கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு…” என, உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருத்தொண்டர் புராண சாரத்தினுள் கூறுதலும்.

“விறற் களந்தைக் கூற்றுவனார் ..” என, சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த திருத்தொண்டர் திருநாமக் கோவையுள் “ கூறியுள்ளதாலும்

கூற்றுவ நாயனார் என்பவர் சோழ வளநாட்டிலே காவிரி நதிக்குத் தெற்கிலே திருக்களரிக்கு நிருதி திசையிலே ஒரு கூப்பிடு தூரத்திலேயுள்ள களந்தைப் பதியிலே குறுநில மன்னர் மரபிலே திருவவதாரம் புரிந்தவர். களப்பாளன் என்னும் திருநாமம் பெற்றவர்.. களந்தையைத் தன்பெயரால் ஏழு கூற்றாகப் பிரித்தமையால் கூற்றுவன் என்னும் பெயர் பெற்றார்.

……………………..தொடரும்…………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக