வியாழன், 17 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 68 - 70

நற்றிணை – அரிய செய்தி – 68 - 70
பொறி -  இயந்திரம்
உருள் பொறி போல எம்முனை வருதல்
பரணர்.நற்.270 : 4
அவள் நிலத்து உருளும் எந்திரம் போலச் செயலற்று எம்முன் வருவள்.
( இவ்வியந்திரத்தின் தன்மை அறிய - ஆய்க. )
நற்றிணை – அரிய செய்தி – 69
நறவு – கள் வகையுள் ஒன்று
…………………………….. பெருமலை
வாங்கு அமைப் பழுநிய நறவு உண்டு
வேங்கை முன்றில் குரவையும் கண்டே
தொல்கபிலர். நற். 276 :  8 – 10
 தலைவ ! எம்மூரில் தங்குக – பெரிய மலையில் விளைந்த – வளைந்த மூங்கிலில் முற்றிய நறவாகிய கள் உண்க ; வேங்கை மரமமைந்த முன்றிலிலே குரவை அயர்தலையும் காண்பாயாக. ( மூங்கில் குழாயில் நறுந்தேன் இட்டு மண்ணில் புதைத்துப் பின் எடுத்துப் பருகுதல் – நாட்படு தேறல் என்பர்.)
நற்றிணை – அரிய செய்தி – 70
கோவேறு கழுதை பூட்டிய தேர்
கழிசேறாடிய கணைக் கால் அத்திரி
குளம்பினும் சேயிறா ஒடுங்கின
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே
உலோச்சனார். நற். 278 : 7  -9

 கடற்கரைக்குத் தலைவன் கோவேறு கழுதை பூட்டிய தேரிலேறி வந்தனன். அவனது தேரின் சக்கரங்களில் கழிக்கரையின்கண் உள்ள சேறு பட்டது. தேரை இழுக்கும் கோவேறு கழுதையின் குளம்புகளில் எங்கும் சிவந்த இறாமீன்கள் சிக்கி அழிந்தன.அவன் அணிந்திருந்த மாலையிலும் மற்று எல்லாவற்றிலும் காற்றால் தூற்றப்படும் வெள்ளிய மணல் செறிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக