சனி, 5 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 34 --- 36

நற்றிணை – அரிய செய்தி – 34 --- 36
                                                                நட்பு
பழகிய பகையும் பிரிவு இன்னாதே
……………… நற்108: 6
பழகியிருந்து பின் பகைவரானவர் தம்மை விட்டுப் பிரியினும் நட்பு கொண்டோர்க்கு  அஃது இன்னாமையே ஆகுமன்றோ…!
நற்றிணை – அரிய செய்தி – 35 
மழை – அறிவியல்
 ……………………. இன் நீர்த்
தடங் கடல் வாயின் உண்டு சில் நீர் என
…………………. நற்.115 : 3 – 4
 மேகங்களும் இனிய நீரையுடைய பெரிய கடலகத்து வாயினால் உண்டு – எஞ்சிய கடலின் நீர் சிறிது நீர் என்னும்படி கொணர்ந்தன.
நற்றிணை – அரிய செய்தி – 36
சூல் கெடுமே
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று
இருவெதிர் ஈன்றவேல் தலைக் கொழுமுளை
சூல்முதிர் மடப்பிடி நாள் மேயல் ஆரும்
கந்தரத்தனார். நற். 116 : 3-5
 சூல் முதிர்ந்த இளைய பெண் யானை ; தன் வயிற்றுச் சூல் கெட்டுப்  புறத்தே வெளிப்படுமாறு பெரிய மூங்கிலின்  முளைத்து எழுந்த ; இலையில்லாத கொழுத்த முளைப்பகுதியை  அறியாது தின்னும்.

மூங்கில் முளையைத் தின்றால் பிடியின் சூல் கெட்டுவிடுமா ? விலங்கியல் நோக்கில் ஆய்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக