செவ்வாய், 29 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 96 -97

நற்றிணை – அரிய செய்தி – 96 -97   

பட்டினம் பெறினும் வாரேன்
பொன்படு கொண்கான நன்னன் நல்நாட்டு
ஏழிற் குன்றம் பெறினும் பொருள்வயின்
யாரே பிரிகிற்பவரே…..
பாலை பாடிய பெருங்கடுங்கோ. நற். 391 : 6 -8
 தலைவி அழாதே ! தலைவன் நின்னைப் பிரியான். கொண்கானத்தில் உள்ள நன்னனது ஏழில் மலையைத் தாம் பெறுவதாயினும் நின்னை விட்டுப் பிரிபவர் யாரோ?
ஒப்பு நோக்குக:-
 முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே…..
கடியலூர் உருத்திரங் கண்ணனார். பட்டினப் பாலை : 218 - 220
நற்றிணை – அரிய செய்தி – 97
காதல் – சாதல் அஞ்சேன்
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
 பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன்கொல் என் காதலன் எனவே.
அம்மூவனார்.நற். 397 :  7 – 9
 தலைவன் பிரிவால் வாடும் தலைவி -  இவ்வுலகில் இறப்புக்கு அஞ்சேன்; இறந்து போனால் நேரும் மறுபிறப்பில் வேறுபட்டுப் போனால் என் காதலனை மறந்துவிட நேருமோ என்றே அஞ்சுகிறேன்.
நற்றிணை – அரிய செய்தி
முற்றிற்று

ஐங்குறுநூறு – அரிய செய்தி … தொடரும்… 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக