ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 77 - 79

நற்றிணை – அரிய செய்தி – 77 - 79
அச்சம் தரும் பேய்
மணல்மலி மூதூர் அகல் நெடுந் தெருவில்
ஆரிருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும்
அணங்கு கால் கிளரும் மயங்கு இருள் நடுநாள்
வினைத் தொழிற் சோகீரனார்.நற். 319 : 3 -5
 மணல் மிகுந்து கிடக்கும் இப்பழைய ஊரிலுள்ள அகன்ற நீண்ட தெருவில் கோட்டான் சேவல் தன் பெண் பறவையோடு – மக்கள் புழக்கம் இல்லாத பெரிய நாற்சந்தி கூடுமிடத்தில் அனைவருக்கும் அச்சமுண்டாகும்படி அலறும் ; பேய்களும் வெளியில் வந்து நடமாடும்.
நற்றிணை – அரிய செய்தி – 78
கணவரைக் காத்த குலமகளிர்
காவல் செறிய மாட்டி ஆய்தொடி
 எழில்மா மேனி மகளிர்
விழுமாந்தனர் தம் கொழுநரைக் காத்தே
கபிலர்.நற். 320 : 8 – 10

அழகிய மாந்தளிர் போன்ற மேனியை உடைய குலமகளிர் அனைவரும் தத்தம் கணவரைக் கைப்பற்றிக் கொண்டு சென்று தம் காவலில் வைத்துப் பரத்தையிடமிருந்து பாதுகாத்து நன்மை அடைந்தனர்.
நற்றிணை – அரிய செய்தி – 79
பார்ப்பன மகளிர்
 கான முல்லைக் கயவாய் அணி
பார்ப்பன மகளிர் சாரர் புறத்து அணிய
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார். நற் 321 : 3 – 4

  காட்டிடத்தே உள்ள முல்லையின் விரிந்த வாயை உடைய மலரை – மலைச் சாரலின் புறத்தே உள்ள பார்ப்பன மகளிர்  பறித்துச் சூடுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக