புதன், 23 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 13

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 13
முல்லை நிலப் பொன்
எழுந்த  கடற்றில் நன்பொன் கொழிப்ப
பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி
மடக்கண் பிணையொடு மறுகுவன உகள
மாங்குடி மருதனார், மதுரைக். 6:  274 - 276
பெரிய அழகினையும் சிறிய தலையயும் உடைய நெளவி மான் தான் வளர்ந்த காட்டில் மாற்றுக்குறையாத பொன் வெளிப்பட்டுத் தோன்றுமாறு மடப்பத்தை உடைய கண்களைக் கொண்ட பிணியுடன் துள்ளித் திரியவும்..
கடறு – காட்டுப் பகுதி ; பிணை – பெண் மான் ; உகள – துள்ளித் திரிய.)
 ஆய்வுக் குறிப்பு :- சங்கஇலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பொன் பற்றிய குறிப்புகளைத் தொகுத்து ஆய்க.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக