ஞாயிறு, 6 மார்ச், 2016

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 6

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 6
மெய்காப்பாளர்
நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள்
அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்
சிதர்வாள் அசைவளிக்கு அசைவந் தாங்கு
துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடைப்
பெரு மூதாளர் ஏமம் சூழ  
                                                     நப்பூதனார், முல்லைப். 5 :  50 – 54
நெடிய நாக்கினை உடைய ஒளி பொருந்திய மணியின் ஒலி குறைந்து அடங்கின நள்ளிரவில், புனலிப் பூக்கள் பூத்த சிறு செடிகள், மழைத் தூறலுடன் வீசுகின்ற காற்றில் அசைந்தாடுவதைப் போன்று, மயிர்க்கட்டுக் கட்டிச் சட்டையிட்ட , நல்லொழுக்கமிக்க, வயது முதிர்ந்த , மெய்காப்பாளர் துயில் மயக்கத்துடன் ஆடி அசைந்து கொண்டே  மன்னனைச் சூழ்ந்து காவலாக நின்றனர்.
( அதிரல் – மோசி மல்லிகை ; சிதர் – மழைத் தூறல் ;  ஏமம் – பாதுகாவல், ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக