திங்கள், 7 மார்ச், 2016

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 7

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 7
நாழிகைக் கணக்கர்
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்
தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் வெரீஇய செல்வோய் நின்
குறுநீர்க் கன்னன் இனைத்து என்று இசைப்ப
     நப்பூதனார், முல்லைப். 5 : 55 – 58
 நாழிகையை அளந்து இத்துணை என்ரு அறியும் பொய்த்தலில்லாத நாழிகைக் கணக்கர், மன்னனைக் கையால் தொழுதேத்தி ‘ கடல் சூழ்ந்த உலகத்தே பகைவரை வெல்லச் செல்கின்றவனே, உன்னுடைய நாழிகை வட்டிலிற் சென்ற நாழிகை இத்துணை காண்’ என்று மன்னனுக்கு அறிவிக்கின்றனர்.
(குறுநீர்க் கன்னல் – நாழிகை வட்டில், வட்டிலில் நீரிட்டு ஒரு சிறு துளை வழியாக அந்நீரைச் சிறிது சிறிதாகக் கசியவிட்டு, அந்நீரினை அளந்து காணும் கருவி ; எறிநீர் – அலையெறியும் கடல் ; வெரீஇய – வெல்லுதற்கு ; இனைத்து – இவ்வளவு,)
 மேலும் காண்க:
” குறுநீர்க் கன்னலின் யாமம் கொள்பவர்” ( மணிமே.7)
   “ நாழிகைக் கணக்கர்,” ( சிலம்பு.5)
”குறுநீர்க்கன்னல் எண்ணுநர் அல்லது

கதிர்மருங் கறியாது அஞ்சுவரப் பாஅய்” – ( அகநா.42) 8/3/16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக