செவ்வாய், 8 மார்ச், 2016

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 8

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 8
மிலேச்சர்
எழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள்
உடம்பின் உரைக்கும் உரையா நாவின்
படம்புகு மிலேச்சர் உழையர் ஆக
            நப்பூதனார், முல்லைப். 5 : 64  – 66

வலிய கயிற்றில் திரை இழுக்கப்பட்டு, உள் அறை, புற அறை ஆக இரண்டு அறைகள் உடைய அரசனின் பாசறை புலிச்சங்கிலியால் ஒப்பனை செய்யப்பட்டிருக்கின்றது ; உள் அறையாகிய பள்ளியறையில் அரசன் இருக்க, அவனருகில் வாய் பேச முடியாத ஊமை மிலேச்சர்கள் பாதுகாவலுக்காக நிற்கிறார்கள் ; அவர்கள் மடங்கிப் புடைத்துத் தோன்றும்படி இறுகக் கட்டின ஆடை அணிந்திருக்கிறார்கள் ; அவ்வாடை மேலே குதிரைச் சவுக்கு வளைந்து கிடக்கிறது ; அவர்கள் சட்டை அணிந்திருக்கிறார்கள் ; வலிமைமிக்க உடல் வனப்புகொண்ட அம்மிலேச்சர்களின் தோற்றம் அச்சம் தரும் வகையில் உள்ளது.
( மிலேச்சர் – பிறநாட்டார் , திருத்தமற்ற மொழியைப் பேசுவோர், அறிவீனன்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக