திங்கள், 28 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 18

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 18
தீர்த்த நீராடல்
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே
மாடம் பிறங்கிய மலி புகழ்க் கூடல்
மாங்குடி மருதனார், மதுரைக். 6: 427 - 429
தீவினையைக் கழுவுவதற்குக் காரணமான தீர்த்த நீரைத் தன்னிடத்தே கொண்ட – நெருங்கும் திருநாளை உடைய ஏழாம் நாள் அந்தியில், விழாவைக்காணத் திரண்டுவரும் நாட்டிலுள்ளார் ஆர்த்த ஆரவாரம் போலப் பெரிய நான்மாடத்தால் மலிந்த புகழொடு விளங்கும் நகரின் அகன்ற இடத்தையுடைய, நாட்காலத்துக் கடையில் ஆரவாரம் எழுந்தது.
 மதுரைக்கு ’நான் மாடக் கூடல்’ என்ற பெயரும் உண்டு.  திருஆலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என்ற நான்கு மாடங்கள் கூடலின் இப்பெயர் பெற்றது.
( தீர்த்த நீர் – பாவம் போக்க நீராடல் ; எழுநாள் அந்தி – கால்கோள் தொடங்கி ஏழாம் நாள் அந்தியில் நடைபெறும் தீர்த்தமாடல் ; கழு நீர் – கழுவும் நீர்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக