சனி, 26 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 16

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 16
பலவகைக் கொடிகள்
சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல்கொடி
வேறு பல்பெயர ஆரெயில் கொளக்கொள
நாள்தோறு எடுத்த நலம்பெறு புனைகொடி
நீர் ஒலித்தன்ன நிலவு வேல் தானையொடு
புலவுப் படக்கொன்று மிடைதோல் ஓட்டி
புகழ் செய்து எடுத்த விறல்சால் நன்கொடி
கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல
பல்வெறு குழூஉக் கொடி பதாகை நிலைஇ
                         மாங்குடி மருதனார், மதுரைக். 6: 366 – 373
மதுரை நகரில் நாளங்காடி, அல்லங்காடி என்ற இருபெரும் கடைத் தெருக்களையும்  அவற்றில் கட்டப்பெற்றுள்ள பல்வேறு கொடிகளும் –
கோயில் விழக்களுக்கு கட்டப்பெறும் பல அழகிய கொடிகள் ; போரில் பெற்ற வெற்றியைக் குறிக்க நாள்தோறும் நாட்டப் பெறும் வெற்றிக் கொடிகள் ; கள்ளின் களிப்பு மிகுதியைச் சாற்றுகின்ற கொடிகள் ; கல்வி, கொடை, தவம் ஆகியவற்றைக் குறிக்கும் கொடிகள் …
பலமொழி பேசும் மக்கள் கலந்தினிது உறையும் மதுரையில் இக்கொடிகள் நாட்டின் அறநெறி பிறழா வாழ்வினைக் குறிப்பனவாகும்.
( சாறு – விழா ; நிலவு வேல் – நிலைபெற்ற வேல் – களி – களிப்பு ; பதாகை – பெருங்கொடி. ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக