திங்கள், 25 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 10

நெடுநல்வாடை அரிய செய்தி  : 10
வானியல்
புதுவது இயன்ற மெழுகு செய் படமிசை
திண் நிலை மருப்பின் ஆடு தலையாக
விண் ஊர்பு இழிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா
                                          நக்கீரர், நெடுநல் .  7: 159 - 163
கட்டில் கால்களின் அருகே நிற்குமாறு அமைத்த, மெழுகு பூசப்பட்ட மேற்கட்டியின் மேல் புதியதாக ஓவியம் தீட்டப்பட்டது.
கதிரவன் வானின்கண், வலிமை வாய்ந்த கொம்புகளைக்கொண்ட, ஆட்டின் பெயருடைய , மேட ராசி முதலாக ஏனை இராசிகளிலும் சென்று இயங்கும் விரைந்து செல்லும் இயக்கத்தைக் கொண்டவன், அவனுடன் மாறுபட்ட  இயக்கமுடையதும், தலைமையுடையதும் ஆகிய திங்கட் செல்வனை உரோகிணி என்னும் நாள்மீன் எஞ்ஞான்றும் விட்டு நீங்காத இயல்பினைக் கொண்டதாகும்.
அரசமாதேவி, உரோகிணியைப் போலத் தானும் தன் கணவனைப் பிரியாமல் வாழும் பேறு பெறவில்லையே என நினைந்து, மெழுகு செய் படத்தில் தீட்டப்பெற்ற  அக்காட்சியைக்கண்டு பெருமூச்செறிந்தனள்.
ஞாயிற்றின் இயக்கம், மெழுகு செய் படத்தில் எழுதப்பெறவில்லை, இத்தொடர் திங்களுக்கு அடையாக வந்துள்ளது.
திங்கள் மண்டிலம், விண்மீன்களின் இயக்கம் – ஆய்ந்து அறிக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக