ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 2

நெடுநல்வாடை அரிய செய்தி  : 2
விளை வயல்
அங்கண் அகல்வயல் ஆர்பெயல் கலித்த
வந்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க
                                        நக்கீரர், நெடுநல் .  7: 21 – 22
வயல்கள் அகன்ற இடமுடையவை. அழகான தோற்றம் உடையவை, அவற்றில் நீர் நிரம்பி இருந்தமையால், நெல்லின் தோகைகள் வளமாகக் காணப்பட்டன. நெற்பயிரிலிருந்து கதிர்கள் வெளிப்பட்டு மேல் எழுந்தன, நெல்மணிகள் முற்றியமையால் நெற்கதிர்கள் தலை சாய்ந்தன.
( தோடு – இலை / தோகை ;  வணங்க – வளைய .) 18/4/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக