புதன், 27 ஏப்ரல், 2016

சிறப்புச் செய்தி
நீதிக்கு – நன்றியுடன் தலைவணங்குவோம்
திரு எஸ். இராசரத்தினம் அவர்களுக்கு நன்றி பாராட்டுவோம்
“                          தமிழகத்தில் வரும் கல்வியாண்டுமுதல்  ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குத் திருக்குறளில் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் பிரிவுகளில் உள்ள அனைத்துக் குறட்பாக்களையும் முழுமையாகக் கற்பிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.”
                        “ நீதிபதி ஆர். மகாதேவன் தனது தீர்ப்பில் “ கல்வி தொடர்பாக உலகின் பல்வேறு அறிஞர்கள் தெரிவித்த கருத்துக்களை ஒப்பிட்டு 2000 – ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவரால்  தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட குறள்கள் மட்டுமே சமுதாயத்தைச் சீர்படுத்த முடியும் எனத் தெரிவித்து 50 குறள்களை உதாரணம் காட்டியுள்ளார்.

                                      தமிழகத்தில் 1948, 1949 ஆகிய ஆண்டுகளில் திருக்குறளைக் கட்டாயப் பாடமாக்க அரசு உத்தரவிட்டது ஆனால், அந்த உத்தரவுகள் அரசியல் காரணங்களால் அமலுக்கு வராமல் போய்விட்டது என்று குறிப்பிட்ட நீதிபதி, திருக்குறள் போல் மனிதரின் வாழ்வை மேம்படுத்தும் சிறந்த படைப்பு வேறு ஒன்றும் இல்லை. திருக்குறள் 90 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது என,  அதன் பெருமையைத் தீர்ப்பில் பட்டியலிட்டுள்ளார்.” – தி இந்து 27/4/16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக