வெள்ளி, 1 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 22

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 22
அறம் கூறு அவையம்
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி
சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்
                            மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 489 – 492
 நடுவு நிலையுடன் தீர்ப்புக் கூறுவாரோ, கூறாரோ என்று அஞ்சி வந்த அச்சத்தையும், அவர்க்குத் தோல்வியால்  நெஞ்சில் தோன்றும் வருத்தத்தையும், அவர்தம் நெஞ்சு கருதின பொருள் மேல் தோற்றிய பற்று உள்ளத்தையும் போக்கி (அவர்தம் உளம் கொள விளக்கிக் கூறி)
ஒரு கூற்றில் செற்றம் செய்யாமல், ஒரு கூற்றில் உவகை செய்யாமல் நெஞ்சினைப் பாதுகாத்து,  துலாக்கோலைப் போல நடுவு நிலைமையுடையவராய் இக்குணங்களால் சிறந்த விரதங்களையுடைய அறநூலைச்  சொல்லும் சான்றோர்களும் – மதுரை நகரில் வாழ்ந்தனர்.
( அறம் கூறு அவையம் – நீதி மன்றம்  அறநூல் முறைப்படி அறம் கூறும் தருமாசனத்தார்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக