சனி, 30 ஏப்ரல், 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 3

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 3
காதல் மணம் …?
மாதரும் மடனும் ஓராங்கு தணப்ப
நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி
இருவேம் ஆய்ந்த மன்றல் இதுஎன
நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற
ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என
மான் அமர் நோக்கம் கலங்கிக் கையற்று
ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும்
                                          கபிலர், குறிஞ்சிப் . 19 – 26

இரு முது குரவரும் தமக்கு இயைந்தவனுக்கு மணமுடித்துக் கொடுப்போம் என்று உள்ளத்தில் கொண்ட காதலும், எனது மடனும் ஒருங்கு நீங்குமாறு, நெடிய தேரினையுடைய என் தந்தையின் கடத்தற்கு அரிய காவலைக் கடந்து, தலைவனும் யானும் பெருமையும் உரனும் அச்சமும் நாணும் நுணுங்கிய நிலையால், பிறந்தது, இக் காதல் மணம் என்று நாம் நம்முடைய தாய்க்கு அறிவுறுத்தலால் நமக்குப் புகழேயன்றி, நம் செயலால் வருவதோர் பழியும் உண்டோ? ( அஃது இல்லை என்பதாம்.)
கொடுப்பாரும் அடுப்பாருமின்றித் தாமே எதிர்பட்டுப் புணரும் களவுப் புணர்ச்சி, ஈண்டு ‘இருவேம் ஆய்ந்த மன்றல்’ எனப்பட்டது.
( ஓராங்கு – ஒருசேர ; தணப்ப – நீங்க ; நீவி – கடந்து ; இருவேம் – தலைவனும் தலைவியும் ஆகிய யாம் இருவர் ; மன்றல் – திருமணம்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக