புதன், 27 ஏப்ரல், 2016

குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டு
                     பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றாகிய இந்நூல், ‘பெருங்குறிஞ்சி’ என்னும் பெயர் பெறுவதாகும்.” கபிலர் பாடிய பெருங்குறிஞ்சியிலும் வந்தது” – பரிபாடல். 19, பரிமேலழகர் உரை.
                         “ கபிலர் பாடிய பெருங்குறிஞ்சியில் வரையின்றிப் பூக்கள் மயங்கியவாறு காண்க”. – தொல். அகத். 19, நச்சினார்க்கினியர் உரை.
                        261 அடிகளைக்கொண்டு, ஆசிரியப் பாவால் அமைந்த  இந்நூலை இயற்றியவர் கபிலர். காப்புக் கைம்மிக்குக் காமம் பெருகிய வழி, தலைவன் வரும் வழியின் ஏதங்களைக் கண்டஞ்சித் தலைவி, தோழிக்கு அறத்தொடு நிற்ப அவள், எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், ஏதீடு, தலைப்பாடு, உண்மை செப்பும் கிளவி ஆகிய ஆறும் செவிலித்தாய்க்குக் கூறி அறத்தொடு நின்றனள், என்பதே இப்பாட்டின் பாடுபொருளாம்.
  குறிஞ்சிப்பாட்டு என்னும் இந்நூல், ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குப் பாடப்பட்டதாகக் கூறப்பட்டுகின்றது. தமிழ் அறிவித்தல் -  தமிழ் மக்களின் புலனெறி வழக்கமாகக் கூறப்பட்ட ஐந்திணைக் காதல் வாழ்வின் சிறப்புக்களை அறிவித்தல் குறித்தது.
’குறிஞ்சிக்கபிலர்’  எனப் போற்றப்படும் கபிலர், சான்றோர் பலரால் போற்றப்பட்டவர். இவர் பாடிய  சங்க இலக்கியப் பாடல்கள் : நற்றிணை -20 ; குறுந்தொகை – 29 ; ஐங்குறுநூறு – 100 ; பதிற்றுப்பத்து – 10 ; கலித் தொகை,( குறிஞ்சிக்கலி) – 29 ; அகநானூறு – 17 ; புறநானூறு – 30 ; குறிஞ்சிப்பாட்டு – 1. எனும் இவையே.
 குறிஞ்சிப்பாட்டு என்னும் இந்நூல், ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குப் பாடப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழ் அறிவித்தல் -  தமிழ் மக்களின் புலன் நெறி வழக்கமாகக் கூறப்பட்ட ஐந்திணைக் காதல் வாழ்வின் சிறப்புக்களை அறிவித்தல்.
இந்நூல் பெருங்குறிஞ்சி என்றும் வழங்கப்பெறும், இயற்கைப் புணர்ச்சியும், அதன் பின்னர் நிகழும் புணர்ச்சிகளின் நிமித்தங்களும் கூறுவதால் இந்நூல் குறிஞ்சிப்பாட்டு எனப் பெயர்பெற்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக