திங்கள், 11 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 31

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 31
பண்டைய இனிப்புப் பண்டங்கள்
இரண்டாம் சாமத்தில் மதுரை நகரம் – ---
நல்வரி இறாஅல் புரையும் மெல்லடை
அயிர் உருப்பு உற்ற ஆடமை விசயம்
கவவொடு பிடித்த வகையமை மோதகம்
தீஞ்சேற்றுக்  கூவியர் தூங்குவனர் உறங்க
                      மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 624 – 627
பாகில் சமைத்த நல்லவரிகளை உடைய தேனிறாலைப் போன்ற  மெல்லிய அடையினையும்,,,, பருப்பும் தேங்காயுமாக உள்ளீடு வைத்து, கண்டசருக்கரையும் சேர்த்துப் பிடித்த வெம்மையுடைய அப்பங்களையும், இனிய பாலோடு சேர்த்துக் கரைத்த மாவினையுடைய அப்பங்களையும் செய்யும் வணிகர்கள், தங்கள் பொருள்களுடன் அயர்ந்து தூங்கினர்.
( நொடை – விலை ;  விசயம் – சருக்கரைப் பாகு ; கூவியர் – அப்ப வணிகர் ; அயிர் – கண்டசருக்கரை ; மோதகம் – அப்பம் .)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக