திங்கள், 8 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :535

திருக்குறள் – சிறப்புரை :535
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும். ----
 எதிர்காலத்தில் வரும்  துன்பங்களை முன்னரே அறிந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தவறியவன், பின்னாளில் தன்பிழைகளை எண்ணி மிகவும் கவலைப்படுவான்.
“ உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு… குறுந்தொகை

முன்னோர் தேடிவைத்த செல்வத்தை அழிப்போர் செல்வம் உடையவர் எனக் கூறப்பெறார் ; இல்லாதவரின் வறுமை பிச்சை எடுப்பதைக் காட்டிலும் இழிவானது.

2 கருத்துகள்: