திங்கள், 9 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :842


திருக்குறள் -சிறப்புரை :842
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம்.--- ௮௪௨
(நெஞ்சு உவந்து)
சிற்றறிவாளன் (சின்ன புத்தி உடையவன்) ஒருவன். தான் மனம் மகிழ்ந்து பிறருக்கு ஒரு பொருளைக் கொடுக்கிறான் என்றால் அதற்குக் காரணம் வேறு ஒன்றுமில்லை அப்பொருளைப் பெற்றவன் செய்த நல்வினையே ஆகும்.
“அறத்து ஆற்றின் ஈயாதது ஈகை அன்று.”—முதுமொழிக்காஞ்சி.
அறவழியில் கொடாதது கொடை ஆகாது.

1 கருத்து: