வியாழன், 19 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :851


86. இகல்
திருக்குறள் -சிறப்புரை :851
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.--- ௮௫௧
இகல் எனப்படுவது முரண்பாடு, அஃதாவது உயிர்கள் அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்து வாழ ஒட்டாது  அவைகளை வேறுபடுத்தும் பண்பின்மையை வளர்க்கும் கொடிய நோய் ஆகும்.
“அரும் பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும் பயனும் ஆற்றவே கொள்க…” ---நாலடியார்.
அருமையான இந்த உடம்பைப் பெற்ற பயனால்  பெரும் நன்மை தரக்கூடிய அறநெறி நிற்றலைத் தேடிக்கொள்ள வேண்டும்.

1 கருத்து: