சனி, 28 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :860


திருக்குறள் -சிறப்புரை :860
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.---- ௮௬0
பகைமையால் ஒருவனுக்கு இன்னாதன எல்லாம் வந்துசேரும்;  நட்பு ஒன்றினாலே நல்லவன் என்னும் பெருமிதம் உண்டாகும்.
“நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்.”---புறநானூறு.
நல்வினையால் வரும் நன்மையும் தீவினையால் வரும் தீமையும் இல்லை என்போர்க்கு நட்புடையன் ஆகாமல் விளங்குக.


1 கருத்து: