வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

தன்னேரிலாத தமிழ் –485: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –485: குறள் கூறும்பொருள்பெறுக.

 

648

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்.


மேடை நெறியறிந்து, தான் பேசக்கருதிய பொருள் பிறழாது, கேட்போர் மனங்கொள, இனிய உரையாற்ற வல்ல ஒருனைப்பெற்றால், அவன் சொல்லை, உலகமே விரைந்து ஏற்று நடக்கும்.


ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃது உடையார்

நால் திசையும் செல்லாத நாடு இல்லை அந்நாடு

வேற்று நாடு ஆகா தமவே ஆம்…”பழமொழி, 55.


ஆன்ற கல்விஅறிவுடையார்தம் சொல், செல்லாத நாடு, நான்கு திசைகளிலும் இல்லை; அந்நாடுகள் வேற்று நாடுகள் ஆகா ; தம்முடைய நாடுகளேயாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக