திங்கள், 1 ஆகஸ்ட், 2022

தன்னேரிலாத தமிழ் –481: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –481: குறள் கூறும்பொருள்பெறுக.

 

636

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்

யாவுள முன்நிற் பவை.


இயற்கையாகவே நுண்ணறிவிற் சிறந்தார்,  நூல்பல காற்றுத்தேர்ந்தார் முன்,  மிகநுட்பமான சூழ்ச்சிகளால் முன்னிற்பவை  யாவை உள.?

சூழ்ச்சிகளை வெல்லும் ஆற்றலுடைய ஆன்றோரே அமைச்சராவர்.


அறனும் பொருளும் வழாமை நாடித்

தற்தகவு உடைமை நோக்கி மற்று அதன்

பின் ஆகும்மே முன்னியது முடித்தல்

அனைய பெரியோர் ஒழுக்கம்….”அகநானூறு, 286.


 அறமும் பொருளும் வழுவாத வகையை ஆராய்ந்து, தனது தகுதியை உணர்ந்து, அதன் பின்னரே தான் கருதியதை முடித்தல் அறிவுடையோர் செயலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக