ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

தன்னேரிலாத தமிழ் –499: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –499: குறள் கூறும்பொருள்பெறுக.

 

 

684

அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு.


மெய்ப்பொருள் அறியும் அறிவு, அரிதாகிய தோற்றப் பொலிவு, நூல்பல கற்று ஆராய்ந்து பெற்ற கல்வி என இம்மூன்றினும் நிறைவான தேர்ச்சிபெற்ற ஒருவனே, தூது செல்லத் தகுதி உடையவனாவான்.


மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல

உருவும் உயர்குலமும் எல்லாம்திருமடந்தை

ஆம்போது அவளோடும் ஆகும்…….”—வாக்குண்டாம், 29.


இனிமையான உறவும்; பெருகிய பொருட்செல்வமும்; சிறந்த தோற்றப் பொலிவும்; நல்ல குடிப் பிறப்பும் ஆகிய  இவையெல்லாம் திருமகள் வந்து சேருகின்றபோது, அவளோடு வந்து சேரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக