வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

 

தன்னேரிலாத தமிழ் –497: குறள் கூறும்பொருள்பெறுக.

 

680

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்

கொள்வர் பெரியார்ப் பணிந்து.


தாம் ஆளும் நிலம் சிறிதாக உடையவர் (குறுநிலமன்னர்) பகைவரால் தம் மக்கள் நடுங்குதற்கு அஞ்சி ; பெருநில மன்னனோடு இணங்கிச்செல்லவே முற்பட்டு , அம்மன்னனைப் பணிந்து ஏற்றுக்கொள்வர்.


காந்து நறும் புண்ணைக் கலந்து விரும்புமே

வேந்தர் தனமே விரும்புவோர் சாந்த நூல்

கல்லார் பகை சேர் கலகம் விரும்புவார்

நல்லார் விரும்புவார் நட்பு.” ---நீதிவெண்பா, 83.


நாறும் புண்ணையே ஈக்கள் விரும்புவதைப் போல, அரசர்கள் செல்வத்தையே விரும்புவார்கள், அவ்வாறே அறநூல்களைப் படிக்காத கெட்ட எண்ணம் கொண்டவர்கள், கலகத்தையே விரும்புவார்கள் ; நல்ல அறநூல்களைப் படித்தவர்கள்  நல்லோர் நட்பையே விரும்புவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக