புதன், 17 ஆகஸ்ட், 2022

தன்னேரிலாத தமிழ் –496: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –496: குறள் கூறும்பொருள்பெறுக.

 

677

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளம் கொளல்.


 ஒரு செயலைச் செய்ய வேண்டிய வழிமுறையாவது, ஏற்கெனவே அச்செயலைச் செய்தவனுடைய பட்டறிவைக் கேட்டறிந்து, அதன்படி செயலாற்ற வேண்டும்,


எப் பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு

மக்கட் பிறப்பின் பிறிது இல்லைஅப்பிறப்பில்

கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்

நிற்றலும் கூடப் பெறின்.” -அறநெறிச்சாரம், 143.


இணையில்லாத மக்கட் பிறவியில், கற்பதற்குரிய உயர்ந்த நூல்களைக் கற்றலும்; அங்ஙனம் கற்ற நூல்களைப் பெரியோர்களிடம் அணுகிக் கேட்டலும் ;கேட்ட அந்நெறிகளினின்று  பிறழாமல் ஒழுகுதலும்; கைவரப் பெற்றால் மக்கட் பிறப்பினைப் போல இன்பம் பயப்பது வேறு ஒன்றுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக