வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

தன்னேரிலாத தமிழ் –491: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –491: குறள் கூறும்பொருள்பெறுக.

 

665

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்

ஊறெய்தி உள்ளப் படும்.


செயல்திறனால் சிறப்பு எய்திப் பலராலும் புகழப்பெற்ற அமைச்சரின் செயலாற்றல் , அரசனுக்கு ஆக்கமும் புகழும் உண்டாக்குவதால்  அவரை எல்லோரும் மதித்துப் போற்றுவர்.


நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி

 அன்பும் அறனும் ஒழியாது காத்துப்

 பழிஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த

செம்மை சான்ற காவிதி மாக்களும்.”மதுரைக்காஞ்சி, 498 – 501.


அமைச்சர் பெருமக்கள், நன்மை தீமைகளை ஆராய்ந்து தீமைகளை விலக்குவர்; அன்பும் அறமும் எக்காலத்தும் தம்மைவிட்டு நீங்காது பாதுகாப்பர்; பழியிலிருந்து நீங்கி உயர்ந்து விளங்குவர் ; எங்கும் பரவிய புகழால் நிறைந்தவர் ; செம்மை சான்றவர்; அரசனால்               ( தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்) காவிதி பட்டம் பெற்றவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக