செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

தன்னேரிலாத தமிழ் –482: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –482: குறள் கூறும்பொருள்பெறுக.

 

640

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்

திறப்பாடு இலாஅ தவர்.


திறமை இல்லாதார், ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழிமுறைகளை நன்கு அறிந்திருந்தபோதும் நிறைவாகச் செய்து முடிக்க முயலாது, அரைகுறையாகச் செய்து முடிப்பர்.


செய்வினை முடியாது எவ்வம் செய்தல்

எய்யாமையோடு இளிவு தலைத் தரும்.” ---நற்றிணை, 284


தொடங்கிய செயலைச் செய்து முடிக்காது, இடையில் நிறுத்திவிடுவது, இழிவைத்தருவதோடு,  அறியாமையையும் வெளிப்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக