செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

தன்னேரிலாத தமிழ் –488: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –488: குறள் கூறும்பொருள்பெறுக.

 

656

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை.

ஈன்ற தாய் பசியால் துன்புற்றாலும் (அதனைக் கண்டு வருந்திய மகன்) அத்துன்பத்தைப் போக்கும் பொருட்டுச் சான்றோர்களால் இகழ்ந்துரைக்கப்படும் செயல்களைச்  செய்யக்கூடாது.

மடங்கப் பசிப்பினும் மாண்புடையாளர்

தொடங்கிப் பிறர் உடைமை மேவார்..” ----பழமொழி, 372.

சான்றோர், தம்முடைய உடம்பு ஒடுங்கும்படி பசியால் வாடினாலும் பிறர் பொருளைக் கொள்ள விரும்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக