திங்கள், 22 ஆகஸ்ட், 2022

தன்னேரிலாத தமிழ் –500: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –500: குறள் கூறும்பொருள்பெறுக.

 

688

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு.


 மனத்தூய்மை உடையவனாதல்; அமைச்சர் முதலிய கற்றறிந்தார் துணையைப் பற்றி நிற்றல்; எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் துணிவு  உடையவனாதல் ஆகிய இம்மூன்றும் நிறைவாகக் கொண்டு.  தன் அரசர் ஆராய்ந்து கூறியவழி ,வாய்மை தவறாது அஃதாவது சொற்குற்றம் வாராது தூதுரைத்தல் தூது செல்வானுக்குரிய பண்புகளாம்.


தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் துன்பங்கள்

ஆயபொழுது ஆற்றும் ஆற்றலும் காய்விடத்து

வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையும் இம்மூன்றும்

சாற்றுங்கால் சாலத் தலை.” அறநெறிச்சாரம், 154.


குற்றம் குறையின்றித் தான் நினைக்கும் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் ஆற்றலும்; துன்பங்கள் சூழும் காலத்திலும் தளர்ந்து விடாமல் தாங்கிக்கொள்ளும் பொறுமையும் ; தன்னை வெறுப்பவரிடத்தில் மாறுபாடு கொள்ளாத உண்மை உணர்வும் ஆகிய இம்மூன்றும் மிகவும் உயர்ந்தனவாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக