ஞாயிறு, 31 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –480: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –480: குறள் கூறும்பொருள்பெறுக.

 

633

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்லது அமைச்சு.


பகைவருக்குத் துணையாக நிற்பவரைப் பிரித்தலும்; தமக்குத் துணையாகவரும் மாற்றாரைப் பாதுகாத்தலும்; பிரிந்து சென்றாரைச் சேர்த்துக் கொள்ளலும் ஆகியவற்றை ஆற்றலுடன் செயல்படுத்த வல்லமை உடையவரே அமைச்சராவார்.


மன்னனும் மாசுஅறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்பு உடையன் - மன்னற்குத்

தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்

 சென்ற இடம் எல்லாம் சிறப்பு.”----- வாக்குண்டாம், 26.


நாடாளும் மன்னனையும் குற்றமில்லா வகையில், கற்றறிந்த புலவரையும் ஆராய்ந்து பார்த்தால், மன்னனைவிடக் கற்றறிந்தவன் சிறப்புடையவனாவான். கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக