திங்கள், 18 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –468: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –468: குறள் கூறும்பொருள்பெறுக.


596

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.


மனத்துள் நினைப்பவையெல்லாம் உயர்ந்த எண்ணங்களாகவே இருத்தல் வேண்டும் ; உயர்ந்த எண்ணங்கள்  கைகூடாவிட்டாலும் அங்ஙனம் எண்ணுவது இகழ்ச்சிக்கு உரியதன்று.


நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப

இன்னே பெறுதி நீ முன்னிய வினையே.”  -திருமுருகாற்றுப்படை, 65, 66.


நீ,  வீடுபேறு வாய்க்க வேண்டும் என்று விரும்பினாயானால், உன் மனத்தில் எழுந்த அவா கைகூடுவதோடு, நல்வினைப் பயனால் நீ, நினத்தவை எல்லாம் இப்பொழுதே அடையப் பெறுவாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக