வியாழன், 28 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –477: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –477: குறள் கூறும்பொருள்பெறுக.

 

625

 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

 இடுக்கண் இடுக்கண் படும்.


ஒன்றன் பின் ஒன்றாகத் துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் அவற்றை மனம் தளராது எதிர்த்து நிற்பவனிடத்துத் துன்பங்கள் துன்பப்பட்டுப் போகும்.


உடற்கு வரும் இடர்  நெஞ்சு ஓங்கு பரத்து உற்றார்

அடுக்கும் ஒரு கோடியாக நடுக்கம் உறார்.”நன்னெறி, 29.


உயர்ந்த பொருளான தவத்தால் விளையும் பயன்பெற  மனம் வைத்தவர்கள், (ஞானிகள்) தன்னை நாடிவரும் துன்பங்கள் கோடி எண்ணிக்கை உடையவை என்றாலும் அச்சம் கொள்ளமாட்டார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக