திங்கள், 4 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –457: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –457: குறள் கூறும்பொருள்பெறுக.

 

555

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.


கொடுங்கோல் மன்னனின் ஆட்சியில், மக்கள் அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரே, கொடுங்கோலன் செல்வ வளத்தை அழிக்கும் படையாகும்.


கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்

தாள் இலான் குடியேபோல் தமியவே தேயுமால்.” ~ கலித்தொகை, 149.


சுற்றத்தினர் மனம் வருந்தும்படியாகத் தேடிக் குவித்த செல்வங்கள், பேணும் முயற்சி இல்லாத மன்னவனின் குடிகள் போலத் தாமாகவே தேய்ந்து அழியும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக