வெள்ளி, 8 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –461: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –461: குறள் கூறும்பொருள்பெறுக.


570

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது

இல்லை நிலக்குப் பொறை.


கொடுங்கோலன், கல்வியறிவில்லாத மூடர்களையே தன் சுற்றமாகக் கொள்வான் ; அம்மூடர்கூட்டத்தைத் தவிர நிலத்திற்குச் சுமையாக இருப்பது வேறு எதுவுமில்லை.


நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச்சாம்

குலனும் குடிமையும் கல்லாமைக் கீழ்ச்சாம்.” நான்மணிக்கடிகை, 80.


அழகும் இளமையும் வறுமையால் கெடும் ; குலத்து உயர்வும் குடிப் பெருமையும் கல்லாமையால் கெடும்.

2 கருத்துகள்: