புதன், 27 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –476: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –476: குறள் கூறும்பொருள்பெறுக.

 

623

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்.


துன்பத்திற்குக் கட்டுண்டு துன்பப்படாதவர்கள், துன்பமே துன்புறுமாறு துணிந்து செயலாற்றி, வெற்றி காண்பார்கள்.


சாதலும் புதுவதன்றே வாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

 இன்னாது என்றலும் இலமே … “ புறநானூறு, 192.


சாதலும் புதுதில்லை; அஃது உலகத்து இயற்கை. வாழ்தலை இனிமை என்று மகிழ்ந்ததும் இல்லை ; வெறுப்பு வந்தவிடத்து வாழ்தலைத் துன்பமானது என்று ஒதுக்கியதும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக