புதன், 6 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –459: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –459: குறள் கூறும்பொருள்பெறுக.

 

562

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்

நீங்காமை வேண்டு பவர்.


தேடிய செல்வம் நெடுங்காலம் தம்மைவிட்டு நீங்காதிருக்க வேண்டுபவர்கள், குற்றவாளியைத் தண்டிக்கும்போது,  முதலில் அவன் அஞ்சுமாறு அச்சுறுத்திப் பின் மென்மையாகத் தண்டிக்க வேண்டும்.


சாம்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை

 ஆம்தனையும் காப்பர் அறிவு உடையோர்மாந்தர்

குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து

மறைக்குமாம் கண்டீர் மரம். – வாக்குண்டாம், 30.


 மனிதர்கள் மரங்களை வெட்டினாலும் அவை அவர்களுக்குக் குளிர்ச்சியான நிழலைக் கொடுத்து, வெயிலை மறைக்கும். அதுபோல நற்குணம் உடையவர்கள்,  தாம் சாகின்றவரை பிறர், தமக்குத் துன்பம் செய்தாலும் அவரையும் தம்மால் முடிந்த அளவு காத்துப் போற்றுவதையே விரும்புவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக