வியாழன், 21 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –471: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –471: குறள் கூறும்பொருள்பெறுக.

 

607

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து

மாண்ட உஞற்று இலவர்.


முயற்சியின் பெருமை அறியாது, சோம்பலை விரும்பித் துய்ப்பவர், பிறரால் கண்டிக்கப்பட்டுப் பலரும் இகழ்ந்துபேசும் நிலையை அடைவர்.


முயலாது வைத்து முயன்று இன்மையாலே

உயலாகா ஊழ்த்திறத்த என்னார் மயலாயும்

ஊற்றமில் தூவிளக்கம் ஊழுண்மை காண்டும் என்று

ஏற்றார் எறிகால் முகத்து.” ---நீதிநெறிவிளக்கம், 50.


தன்னுடைய எதிர்கால ஊழின் நன்மை தீமைகளை விளக்கு வைத்துப் பார்க்க விரும்பும் ஒருவன், அசைந்துகொண்டே இருக்கும் தூய விளக்கை, மயங்கியும்  வீசுகின்ற காற்றுக்கு எதிரில் ஏற்ற மாட்டான்.  அதுபோன்று,  முயலாது இருந்து ஊழ்வினை காரணமாக  வருகின்ற நன்மைகள், முயற்சியின்றி இருப்பதினாலேயே  தனக்குக் கிடைக்காமல் போகமாட்டா என்று நினைத்து  முயலாது இருக்கவும் மாட்டான்.

 எனவே எல்லாம் விதிப்படியே நடக்கும் என்று கருதி, அறிஞர்கள் முயற்சியின்றி  இருக்க மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக