வெள்ளி, 22 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –472: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –472: குறள் கூறும்பொருள்பெறுக.

 

609

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்

மடியாண்மை மாற்றக் கெடும்.


குடும்பம் நடத்தத் தெரியாதவன் என்னும் குற்றம் சுமந்த ஒருவன், தன் சோம்பலை முயற்சி என்னும்  ஆளுமையால் மாற்ற, அக் குற்றம் நீங்கிவிடும்.


சாவது எளிது அரிது சான்றாண்மை நல்லது

 மேவல் எளிது அரிது மெய் போற்றல்….. “ ஏலாதி, 39.


உயிரை விடுதல் எளிது ; மேலான கல்வி கேள்விகளால் நிறைந்து ஒழுகுதல் அரிது. மனை வாழ்க்கை ஏற்றல் எளிது ; அதன்கண் ஒழுக்கத்தைக் காத்தல் அரிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக