வெள்ளி, 19 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -23 – 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள்.

 

தமிழாய்வுத் தடங்கள் -23 – 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள்.



புதுச்சேரி ஆரோவில் பகுதியில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட   7- முதுமக்கள் தாழிகளைக் கண்டுபிடித்துள்ளனர். தாழியில் அக்கால மக்கள் பயன்படுத்திய , இரும்பு,(ஐந்து வாள்கள்,  மூன்று  ஈட்டிகள் , நான்கு குத்து வாள்கள், கத்திகள்)  செம்பு, ( இரண்டுபாத்திரங்கள்) பித்தளை, (ஒரு மணி )  பீங்கான், களிமண் ஆகியவற்றால் ஆகிய  பொருள்களுடன் தாழியின் அருகே மதிப்புமிக்க  அரிய கற்களும்  கண்ணாடியால் செய்யப்பெற்ற சில பொருள்களும் கிடைத்துள்ளன. கற்காலத்திற்குப் பிந்தைய பகுதியாகிய நியோலிதிக் காலத்தைச் சார்ந்த (கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட )  கற்கருவிகளும் கிடைத்துள்ளன. இப்பகுதி துறைமுக நகரமான அரிக்கமேடு வாழ்வியலோடு உறவுடையதாகத் தெரிகிறது என்கிறார் பேராசிரியர் இரவிச்சந்திரன்.  அவர், மேலும்  இப்பகுதியில்  அகழாய்வு மேற்கொள்ள வேண்டியிருப்பதாகும் கூறுகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக