வெள்ளி, 23 டிசம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் - சான்றோர் சிந்தனை

மாரி பொய்ப்பினும்  வாரி குன்றினும் 
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும்  இக் கண்ணகன் ஞாலம்
                              வெள்ளைக்குடி நாகனார், புறம்.35: 27-29
 உரை: மழை பெய்யாவிட்டாலும் விளைவு இல்லாவிட்டாலும் இயல்பு அல்லாதன மக்களது தொழிலிலே தோன்றினாலும்  காவலரைப் பழிக்கும் இவ்விடமன்ற உலகம்.
என்னே சங்கப் புலவரின் தொலை நோக்குச் சிந்தனை,  இயற்கை அல்லன செயற்கையால் தோன்றுமாம் அதாவது மக்கள் தொழிலால் தோன்றுமாம். காடழித்தல்,மணல் கொள்ளையடித்தல், நெகிழ்வி பயன்படுத்தல், காற்றை மாசூட்டுதல் போன்ற கொடுமைகளை மக்கள் செய்கின்றனரே இதைதான் செயற்கையால் இயற்கையை அழித்தல் என்று புலவர் கூறினார் என்று கொள்க.காவலர்  - அன்று- மன்னன், இன்று- ஆள்வோர்

1 கருத்து:

  1. இன்றைய நிலை கூறும் அன்றைய தமிழ்ப்புலவன். அய்யா, ஆஇதை முகநூலில் பதிவிடுங்கள்

    பதிலளிநீக்கு